இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில்... Read more »

மணிப்பூரில் கலவரம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இரு இன மக்களுக்கிடையில் 4 மாதங்களுக்கு மேலாக கலவரம் இடம் பெற்று வருகின்றது. இக் கலவரத்தில் 170 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கலவரத்தகை் கட்டுப்படுத்துவதற்காக மாநில காவல்துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில்... Read more »
Ad Widget

இந்திய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

இந்தியாவின் – தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் – மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த... Read more »

இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை!

இந்தியாவை உலுக்கிய தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 215 பேரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மலைவாழ் பெண்கள் வன்கொடுமை தருமபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு... Read more »

இந்தியா கனடா நட்புறவை சீர்குலைக்க சதித்திட்டம்

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இந்தியாவிடம்... Read more »

உறுப்பு தானம் செய்வோர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்

இறக்கும் முன் தமது உறுப்புக்களை தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத்... Read more »

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர்... Read more »

இலங்கை வந்த இந்திய பயங்கரவாதி நாடுகடத்தல்!

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்புப் படையினருக்கு தேடப்படும் சந்தேகநபர், இந்திய பாதுகாப்புப் படையினரையும், இந்திய நீதிமன்றங்களையும் தவிர்த்து வருகிறார். வர்த்தகர்போன்று ஏமாற்றிய... Read more »

கனேடியர்களின் விசாவை நிறுத்திய இந்தியா!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல், கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி... Read more »

சந்திரயான் 3 திட்ட பொறியியலாளர் இட்லி விற்கும் அவலம்!

சந்திரயான் 3 இன் வெற்றி இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த பொறியாளர் ஊதியம் வழங்கப்படாததால், தற்போது இட்லி விற்று பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலவுக்கு விண்கலத்தை... Read more »