மாலைதீவில் சற்று முன்னர் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மாலைத்தீவுக்கு மேற்கே 896 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. Read more »
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 8ஆம் திகதி வாய்மொழி வாக்குவாதம்... Read more »
நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட பொலிஸார்... Read more »
இந்தோனேசஷியாவின் ஜாவாவின் கிழக்கே ரான்சேகெக் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை 28 எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்... Read more »
தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பாராலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் விடுதலை செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார், இதன்படி, 2029 வரை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.... Read more »
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், 200 இற்க்கும் மேற்பட்ட பீரங்கி... Read more »
சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை இவ்வாண்டிறுதிக்குள் கொவிட்-19 தொற்று பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் சீன சிவில் விமான நிர்வாக அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த விடயத்தை தெரிவித்தது. 2024ஆம் ஆண்டிறுதிக்குள் வாரத்துக்கு... Read more »
தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான ஜனவரி முதலாம் திகதியன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனேடியத் தேசியக் கொடி என்பன கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. இதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச்செய்தியில், “நாடுகடந்த... Read more »
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.... Read more »
தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டு சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக உள்நாட்டு மதுபானம் மீதான வரியை குறைப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு தேசிய வரிகள் மறுசீரமைப்பு, மதுபான வரி மறுசீரமைப்பு... Read more »

