வடகொரியாவின் நடவடிக்கைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அயல் நாடான தென்கொரியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் வடகொரியாவின் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடகொரியா இன்று (28) காலை 8 மணியளவில்,... Read more »
றோயல் கரீபியன் கப்பல் (Royal caribbean) நிறுவனத்திற்கு சொந்தமான 20 மாடிகளை கொண்ட Icon of the Seas ஆடம்பர சொகுசு கப்பல் நேற்று (27) அமெரிக்காவின் மியாமியில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது. 20 மாடிகளை கொண்ட இந்த கப்பல் சுமார்... Read more »
காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்த்துறை ஆலோசகர் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளார். ஜோடி தோமஸ் நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து... Read more »
துருக்கியில் சனிக்கிழமை (27) 5.01 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கிழக்கு துருக்கியில் வியாழக்கிழமை (25) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம்... Read more »
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990களில் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுத்தளார் ஈ ஜீன் கேரல் (E. Jean Carroll) சில ஆண்டுகளுக்குமுன் வழக்குத் தொடுத்திருந்தார். குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப்... Read more »
சீனாவின் டிபிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று... Read more »
நேட்டோ அமைப்பில் சுவீடன் நாட்டுக்கு அங்கத்துவதை வழங்க துருக்கி உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹங்கேரியும் ஒப்புதல் வழங்கினால், நோர்டிக் நாடான சுவீடன் நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடாக மாறிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த யோசனைக்கு துருக்கி பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல்... Read more »
இஸ்ரேல் – காசா இடையிலான போர் இடைவிடாது நான்கு மாதங்களாக தொடர்கிறது. காசாவில் வாழும் மக்கள் அன்றாடம் உணவுக்கும் சுகாதாரத் தேவைகளுக்கும் திண்டாடி வருகின்றனர். இஸ்ரேல் – காசா போர் அந்த பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முழு உலகளாவிய பொருளாதாரத்திலும்... Read more »
அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டித்துள்ளார். இப்படியான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது சித்திரவதை செய்தமைக்கு இணையானது எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விசா விலக்கு சீனப் புத்தாண்டு விடுமுறையான பிப்ரவரி 9ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது. நேற்றைய தினம் (ஜனவரி 25ஆம் திகதி) இதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். சிங்கப்பூர் மற்றும் சீனாவில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல்... Read more »

