ஐக்கிய நாடுகளின் அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் சில உடன்படிக்கைகளில் பான் கீ மூன் கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவை... Read more »
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த இந்த யோசனையை சமர்ப்பிக்கவுள்ளார்.... Read more »
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்... Read more »
மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு... Read more »
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ( வடலியம்மன்) திருக்கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலயப் பிரதான மண்டபத்தில் சிறப்புச்சொற்பொழிவு 27.01.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம் 04.02.2023 சனிக்கிழமை வரை காலை 11.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின்... Read more »
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றையதினம்முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்திற்கு பக்தர்கள் சென்றுவர... Read more »
யாழ்.வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் ரூபா பதினைந்தாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை... Read more »
தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு… எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு... Read more »
பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் புளியந்தீவு தெற்கில் இடம்பெற்றது… பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் சுதந்திர தின வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்... Read more »
இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி மற்றும் சர்ச்சைகள் என்ற தொனிப்பொருளில் இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்களின் தேசிய அளவிலான பொருளியல் ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமுலை வளாகத்தில் நடைபெற்றது. இது இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்கள் சங்கத்தினுடைய 11 ஆவது ஆய்வு மாநாடாகும். இந்... Read more »

