ஆன்லைனில் கையடக்க தொலைபேசி ஓடர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம்... Read more »

கிளிநொச்சி பாடசாலை பெண் அதிபரின் மோசமான செயல் அம்பலமானது!

கிளி/ கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர், மாணவி ஒருவரை தான அடித்ததை நியாயப்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரி தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை , அதிபரிடம் சம்பவம்... Read more »
Ad Widget

யாழில் தந்தையின் பணத்தை திருடி பக்கத்து வீட்டு பெண்ணுக்கு நகை பரிசளித்த மகன்

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மாணவரான மகன் வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, சங்கிலி வாங்கி அயல் வீட்டு இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது. தனது வங்கி அட்டையிலிருந்து... Read more »

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் இந்த நாட்களில் டெங்கு மற்றும் கோவிட் பரவி வருவதாக பாணந்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மல்கந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார். தொண்டைப்புண், இருமல், சளி ஆகியவற்றுடன் காய்ச்சலும் இருந்தால், அது கோவிட் அறிகுறியாகவும், தசைகளில் கடுமையான வலி, தலைவலி, டெங்கு... Read more »

மஹிந்தவை பிரதமராக்குவதில் ஆர்வம் காட்டும் சீனா!

மகிந்தவை மீண்டும் பிரதமராக்குவதில் சீனா மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது என அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர அரசியல் செயற்பாட்டைத் தொடங்கியது தான் தாமதம், அவரது வீட்டுக்கு அடிக்கடி பல முக்கிய பிரமுகர்கள் வந்து... Read more »

சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தற்போது சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏறக்குறைய 33% குடும்பங்கள் இந்த நன்மைக்கு தகுதியற்றவர்கள் என்று பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்ற குழு (COPA) தெரிவித்துள்ளது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தற்போதைய... Read more »

16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் சாத்தியம் அத்துடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2... Read more »

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பின்பற்ற வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும் போது ஜன்னல்களை மூடுவது, வெளிப்புற வெப்பநிலை மீண்டும் குறையும் போது... Read more »

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (19-04-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (29-04-2023) தேவஸ்தானத்தில் 1008 பானைகளில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது... Read more »

இலங்கை குரங்குகள் ஏற்றுமதிக்கான காரணத்தை வெளியிட்ட சீனா!

சீனாவிலுள்ள மிருகக்காட்சி சாலைகளில் கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் முன்மொழிவை விவசாய அமைச்சர், அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதுடன் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய அமைச்சரவை... Read more »