பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது கத்துக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப்அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று... Read more »

நுளம்புக்குப் புகை மூட்டிய மூதாட்டி உயிரிழப்பு!

நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம் பொன்னம்மா... Read more »
Ad Widget

விழிப்புணர்வு பதிவு

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று தொலைபேசி மூலம் 0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு Dialog சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை... Read more »

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.... Read more »

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி... Read more »

பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது – பிணையில் இருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பியோட்டம் பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த... Read more »

மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி!

நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதாக தெரியவருகிறது. மருத்துவமனையின் 2வது விடுதியில் உள்ள ஒரு நோயாளி நேற்று (15) மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலையில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த வேகவைத்த பல்லியைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக... Read more »

4 வயது குழந்தையுடன் நீர்தேக்கத்தில் பாய்ந்த தாய்..!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் 16ஆம் திகதி வியாழக்கிழமை (16) மாலை 4 மணியளவில் குதித்துள்ளார். இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்கின்றது. அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக... Read more »

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது

கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் இன்று அதிகாலை... Read more »

தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். களுத்துறை... Read more »