சுவிஸில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்

ஐரோப்பிய நாடுகளில் புகலிட கோரிக்கையாளர்களின் நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் சுவிட்ஸர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு அமைவாகவே இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள்... Read more »

இந்தியாவின் 40 வீத செல்வம் ஒரு வீத பணக்காரர்கள் வசம்

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஒரு வீதமாக இருக்கும் செல்வந்தர்கள், இந்தியாவின் 40 வீத செல்வத்தை வைத்திருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகையில் ஒரு வீதமாக இருக்கும் செல்வந்தர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அதிக செல்வ... Read more »
Ad Widget

நிதி நெருக்கடி குற்றச்செயல்களில் பாரியளவு அதிகரிப்பு

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிக்க முனைவதால் தொடரும் மோசடிகள் மற்றும் இணையவழி மோசடிகளுக்கு தனிநபர்கள் இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. தற்போது, சமூக ஊடக தொடர்பாடல் தளங்கள் மூலம்... Read more »

ருதுராஜிடம் தோனி கூறிய ஒற்றை வார்த்தை

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு ஐபிஎல் தொடர் 2008இல் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னை அணியின் தலைவராகச் செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி முக்கியமானதொரு காரணம். அவருக்கு 42 வயதாகிவிட்ட... Read more »

கனேடிய அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் வருகைக்கு வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவின் இந்த நடவடிக்கை சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கும் பொருந்தும் என மார்க் மில்லர்... Read more »

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விளக்கமறியல்

கலால் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் ஏழு நாட்கள் அமலாக்க இயக்குனரக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்... Read more »

ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்று வெள்ளிக்கிழமை அவசரமாக இஸ்ரேல் சென்றுள்ளார். காஸாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது. போர் தொடங்கியது... Read more »

சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனமாக கருத வேண்டாம்: சரத் வீரசேகர

“வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த மரபுரிமைகளை அழித்து, அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால்தான், தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.” – இவ்வாறு தேசிய... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளை எனக்கு தெரியும் மைத்திரி

இலங்கை கடுமையான நெருக்கடியில் உள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஸ்திரத்தன்மை அவசியம். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஒன்றின் ஊடாகவே அது சாத்தியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ”அமையும் புதிய அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன்,... Read more »

பாலின உறவுக்கான வயது வரம்பு 14 ஆக குறைப்பு

பாலின உறவுக்கான வயது வரம்பை 14 ஆக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற இலங்கைப் பெண்களின் வலுவான கோரிக்கையை அவர் எடுத்துரைத்தார். தண்டனைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம்,... Read more »