முல்லைத்தீவில் மரதடிகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு பின்பாகவுள்ள காட்டு பகுதியில் மரதடி கடத்தல் முயற்சி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. உடையார்கட்டு காட்டுப்பகுதியில் நேற்று (09.04.2025) இரவு மரதடிகள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட நடவடிக்கையில் 1700ற்கு... Read more »

ஏப்ரல் 15 பொது விடுமுறையா? – அரசாங்க தரப்பில் இருந்து விசேட அறிவிப்பு

ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. புத்தாண்டு சீசன் காரணமாக ஏப்ரல்... Read more »
Ad Widget

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த வங்கி அட்டைப் பாவனை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்னோடித் திட்டம் கொட்டாவ மற்றும் கடவத்தை இடமாறும் பகுதிகளுக்கு... Read more »

காங்கேசன்துறையில் இருந்து பேருந்து சேவை ஆரம்பம்

764ம் இலக்க தனியார் பேருந்து சேவை இனிமேல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என, தனியார் பேருந்து சேவையின் 764 பிரிவின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். வீதி விடுவிப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,... Read more »

உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலை... Read more »

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் குழு நேரில் ஆராய்வு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை... Read more »

நாடு முழுவதும் உள்ள மதுபானக்கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது

நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா (ஏப்ரல் 13 மற்றும் 14) ஆகியவற்றைக்... Read more »

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 10) பிணை வழங்கியுள்ளது. இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more »

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 128 முறைப்பாடுகள் பதிவு

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான இரண்டு குற்றவியல் முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறிய... Read more »

போக்குவரத்து அபராதம் செலுத்த Govpay செயலி அறிமுகப்படுத்த தீர்மானம்

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக GovPay செயலி மூலம் செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில் செயல்படுத்த நடவடிக்கை... Read more »