பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று(09) விதித்துள்ளது. 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடம் குறித்த அதிகாரி... Read more »
நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு இன்று (09) முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலும், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த சிறப்பு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி,... Read more »
கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர்... Read more »
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகொப்டரை அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.... Read more »
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, நேற்று இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இந்திய பாதுகாப்புப் படை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளது. ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி,... Read more »
ஜனாதிபதி செயலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களின் இரண்டாம் கட்ட விற்பனைக்காக, விலைமனுக் கோரப்பட்டுள்ளது. 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன. BMW வாகனங்கள் – 2 போர்ட் எவரெஸ்ட்... Read more »
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்நிலை... Read more »
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், குறித்த விடயத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுவதாகவும் அவரை பாதுகாப்பதற்கு அரசாங்கம்... Read more »
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இடங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகள் ஆகியவையும் குறித்த... Read more »
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் நாடாளுமன்றில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நாடாளுமன்றில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் சிறுமியை பாடசாலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார் என கூறினார். அத்துடன்... Read more »

