விமான பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

உலகின் பல நாடுகளில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சில நாடுகள் சுகாதார பாதுகாப்பினை பலப்படுத்தி வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. விமான பயணிகளுக்கான அறிவுறுத்தல்... Read more »

முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள்... Read more »
Ad Widget

பௌத்த பிக்கு ஒருவரின் மோசமான செயல்!

ரன்முத்துகலை சிறுவர் இல்ல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே சுதம்ம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் 14 மற்றும் 17 வயதுடைய... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தவணை முறையில் வழங்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை தவணை முறையில் மட்டுமே வழங்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க... Read more »

இன்றைய ராசிபலன் 13.01.2023

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகள் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர்... Read more »

மின் கட்டணம் செலுத்தாத அரச தொலைக்காட்சி

மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மின்கட்டணமாக ரூபவாஹினிகூட்டுத்தாபனம் 5.5 மில்லியனை செலுத்தவேண்டியுள்ளதாக அந்தஅதிகாரி தெரிவித்துள்ளார்.மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம் முற்றுகை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம் அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதமை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதன் ஊழியர்கள் குறித்த அலுவலகத்தை சுற்றுவளைத்தனர். 2022ஆம் ஆண்டு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது பணியகத்தினால்... Read more »

ஜனாதிபதிக்கு மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை!

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி... Read more »

பொத்துவில் கே.சுல்பிகாருக்கு ஓட்டமாவடி தவிசாளரினால் வரவேற்பு

பொத்துவில் கே.சுல்பிகாருக்கு ஓட்டமாவடி தவிசாளரினால் வரவேற்பு “போதையை ஒழிப்போம், பாடசாலை மாணவர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள், இளைஞர்கள், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரை சைக்கிளோட்டதை ஆரம்பித்துள்ள பொத்துவிலையைச்சேர்ந்த கே.சுல்பிகாருக்கு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர்... Read more »

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிட்னி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னி டவுனிங் சென்டர்... Read more »