என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு? – ராதிகா ஆதங்கம்

என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு? என் உழைப்பை ஒரு நொடி கூட உன்னால செய்ய முடியாது – ராதிகா ஆதங்கம் விகடன் சின்னத்திரை விருது வழங்கல் நிகழ்ச்சியில் விருது வாங்கிய நிலையில் ஆதங்கமாக ​பேசிய நடிகை ராதிகா சரத்குமார், தன்னை பற்றி... Read more »

மைக்ரோசொப்ட் செயலிழப்பால் Crowdstrike நிறுவனத்திற்கு 9 பில்லியன் டொலர் இழப்பு!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்ரைக்’ (Crowdstrike) என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில்... Read more »
Ad Widget

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பெறுபேறுகள் வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல்... Read more »

கப்பல் சின்னத்திலா குதிரை சின்னத்திலா ரணில்?

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக் கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதிக் கட்ட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது. யானை, அன்னம் மற்றும்... Read more »

பொது வேட்பாளர்: ஒப்பந்தம் திங்கட்கிழமை

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற... Read more »

தமிழ்த் தேசிய உணர்வு சுமந்திரனிடம் இல்லை: விக்கி

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற என்னுடைய அருமை மாணவன் எம்.ஏ.சுமந்திரன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்வு அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ – உணர்ச்சியினாலோ பார்க்கக் கூடியவர் அல்லர்.” – இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின்... Read more »

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த... Read more »

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் வருடாந்த மஹோற்சவம்

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்றையதினம் இரதோற்சவம் இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 11 மணியளவில் அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது பெருமளவு பக்தர்கள் பங்கேற்றதுடன் அங்கப்பிரதட்சணம் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலய மஹோற்சவம்... Read more »

யாழ் கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயக ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். Read more »

இலங்கை நோக்கி வந்த கப்பல் பற்றியெரிந்தது

கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்ததாக இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி)... Read more »