கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிட்னி மரதனில் இஸ்ரேலிய படையினர் பங்கேற்பு
சிட்னி மரதன் போட்டியில் காஸா போருடன் தொடர்புடைய இஸ்ரேிய ராணுவ வீரர்கள் கலந்துகொண்டதை எதிர்த்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் சிட்னியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காஸாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிவுகளைச் சேர்ந்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இந்த மரதனில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் பாலஸ்தீன கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கோலானி கட்டளையகம் மற்றும் 8200 ஆம் பிரிவு போன்ற இஸ்ரேலிய ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சர்வதேச சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

