துருக்கியில் இஸ்தான்புல் நகரில் தொடங்கும் முதல் மாநாடு

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் தொடங்கும் முதல் மாநாடு: முப்படை தளபதிகள் பங்கேற்பு!

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் முதல் மாநாடு இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக, துருக்கி பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஒப்பந்தம் ஒரு மாதத்துக்கு முன்னர் கையெழுத்தானது.

 

பிராந்திய பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்தநிலையில், மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் இந்தப் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin