மோட்டார் சைக்கிளுக்கும் தன் தலைக்கும் பெட்ரோல் அடித்த நபர் கைது.
ஹோமாகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் மீதும் தன் உடலுக்கும், தலைக்கும் எரிபொருள் ஊற்றிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, நிலைய ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், அந்த நபரை கைது செய்த அதேவேளை மோட்டார் சைக்கிளையும் காவலில் எடுத்துள்ளனர்.
குறித்த நபர் தன்னை எரித்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

