2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில்
இஸ்ரேல் அணி பங்கேற்கும் பட்சத்தில், தாங்கள் அந்தத் தொடரில் இருந்து விலக நேரிடும் என ஸ்பெயின் அரசு மறைமுகமாக எச்சரித்துள்ளது.
சர்வதேச கால்பந்து அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல், விளையாட்டு மற்றும் அரசியலுக்கு இடையிலான மோதலை மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
ஸ்பெயினின் ஆளும் சோசலிசக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பட்சி லோபஸ் (Patxi López), இது குறித்துப் பேசுகையில், காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு (Boycott) குறித்துப் பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது பிபா தடை விதித்தது போல, இஸ்ரேல் மீதும் சர்வதேசத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஏற்கனவே வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

