இரண்டே வாரத்தில் காலியான அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஈரானின் ராஜதந்திரத்தால் நிலைகுலைந்த வல்லரசு.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணை இருப்பை அதிவேகமாக இழந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத் தாக்குதல்களில் டோமாஹாக் மற்றும் பேட்ரியாட் போன்ற ஏவுகணைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் போருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயுதங்களால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு தளம் பலவீனமடைந்துள்ளது.
ஈரான் தனது மலிவான ட்ரோன்கள் மூலம் அமெரிக்காவின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடைமறிப்பு ஏவுகணைகளை வீணடிக்கச் செய்கிறது. இந்த புத்திசாலித்தனமான நகர்வால் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகி வருவதோடு, இஸ்ரேலுக்கான பாதுகாப்பு ஆதரவும் கேள்விக்குறியாகியுள்ளது. நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இந்த நெருக்கடி அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

