ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கொழும்பில் ஆரப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor