பள்ளி கழிவறையில் ஆசிரியைக்கு நேர்ந்த கதி.! 14 வயது மாணவனின் கொடூரச் செயல். நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.!!!
US டான்வர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் ஒருவன், தனது ஆசிரியை கொலீன் ரிட்சரை கழிவறை வரை பின்தொடர்ந்து சென்று கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளான்
சக மனிதர்களையே அதிரவைக்கும் இந்தச் சம்பவத்தில், அந்த மாணவன் ஆசிரியை உயிரிழந்ததை உறுதி செய்த பின் அங்கிருந்து தப்பித்துள்ளான். பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கொலை செய்த பிறகு, ஆசிரியையின் உடலை ஒரு மறுசுழற்சித் தொட்டியில் மறைத்து வைத்து, யாருக்கும் தெரியாமல் பள்ளியின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று வீசியுள்ளான். பின்னர் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆசிரியையின் உடல் கண்டெடுக்கப்பட்டு, அந்த மாணவன் கைது செய்யப்பட்டான். இளம் வயதிலேயே இத்தகைய வன்மத்துடன் ஒரு மாணவன் நடந்துகொண்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

