மகாவலி அதிகார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான நீரை எதிர்வரும் 20ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மகாவலி H வலயத்திற்கு உட்பட்ட வெலிகந்தை, கிராந்துருகோட்டை மற்றும் கலாவாவி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நெவில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர இராஜாங்கனை மற்றும் நாச்சதூவ குளங்களிலிருந்தும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

கலாவாவியில் தற்போது 85 வீதம் நீர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடவை பெரும்போகத்தில் 96,438 ஹெக்டேயரில் நெற்செய்கை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor