நீண்ட காலத்திற்கு பின்னர் கைதான குற்றவாளி!

31 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு தந்தையும் மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண்ணொருவரும் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி என தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும் மகனும் கொலை
மஹரகம, நாவின்ன பிரதேசம் மற்றும் பாணந்துறை, பேசப்பிரிய மாவத்தை பிரதேசத்தில் வசித்த தந்தையும் மகனும் 31 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

47 வயதான கருணாரத்னாலாவின் ராஜா மற்றும் 21 வயதான கருணாரத்னாலாவின் ரஞ்சித் குமார் ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். பாணந்துறை, மெண்டிஸ் மாவத்தையில் உள்ள வீடொன்றில் தந்தையும், பிலியந்தலை தம்பே பிரதேசத்தில் மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தம்பேயில் கொல்லப்பட்ட மகனின் சடலம் பொல்கொட ஆற்றுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று (08) பிற்பகல் கைது செய்யப்பட்ட பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை இன்று (09) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இந்த இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor