யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளம் குடும்ப பெண்ணை எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் ஒருவரே நேற்றுமுன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டனர்.

மேலும் சந்தேக நபர் நேற்று யாழ்.மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்க முடியாது.

இதன்போது சுட்டிக்காட்டிய மன்று வரும் 21ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Recommended For You

About the Author: webeditor