இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம்

இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்றைய தினம் புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

விபத்தில் காயமடைந்த மூன்று இராணுவ வீரர்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin