பதுளை, பசறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு.

பதுளை, பசறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு.

​பதுளை, பசறை, 10-கணுவா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

​பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

​உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin