பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் (12.08.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், நெடுந்தீவின் வீதி புனரமைப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, மாவட்ட அபிவிருத்தி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பான விபரங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.


