தம்பலகாமத்தில் வீடு ஒன்று தீக்கிரை ஆகியுள்ளது..!
தம்பலகாமம் நடுப்பிரப்பந்திடலில் 25.07.2025 இரவு 12 மணியளவில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
வெளிநாட்டுக்கு சென்று இரவு இலங்கை திரும்பியவரை அழைத்துவருவதற்காக குடும்பம் அனைவரும் கொழும்பு சென்ற வேளை இரவு 12மணியளவில் வீடு தீப்பிடித்திருந்திருக்கின்றது
காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை அதிகளவான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதுடன் உயிர்சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


