ஊர்காவற்துறையில் உணவு வழங்கும் நிலையம் திறப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக யாழ்.தீவகம் ஊர்காவற்துறையில் வறிய நிலை முதியோருக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்காக உணவு வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ், இலங்கை(ஐவுசு)பணிப்பாளருமான யாழ், தீவகம், வேலணை மேற்கு, சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்கள் குறித்த உணவு வழங்கும் நிலையத்தை திறந்து உணவு வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாகிகளான, ஆலோசகர் இ.மயில்வாகனம், யாழ்.கிளைத் தலைவர் தனேந்திரம், சமூக சேவையாளரான பாஸ்கரன், தெய்வேந்திரம், கிராம சேவையாளர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor