ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (23) திகதி மிகவும் பக்திபூர்வமாக இடபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடபெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு மாமாங்கேஸ்வரப் பெருமானின் அருளாசியைப் பெற்றுக்கொள்ள நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை கொண்டிருந்ததுடன், நாளைய தினம் ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


