தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் சடலமாக மீட்பு: மரணத்திற்கான காரணம் தெரியவில்லை
இந்தியா, தமிழ்நாட்டின் குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 38 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், கணேசமூர்த்தி சரஸ்வதி எனத் தெரியவந்துள்ளது.
அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் கூற்றுப்படி, அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும், மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

