வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..!

வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..!

தொழினுட்ப மேம்பாடும், தொழிற்போட்டியும் நிறைந்த உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு, துறைசார் நிபுணத்துவம் மிக்கவர்களாக தம்மை தகவமைத்துக் கொள்வதன் மூலமே, இளையோர் தம் எதிர்காலத்தை நிருணயித்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

CAN நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இளம் தொழிலதிபருமான SY நிறோ அவர்களின் ஒழுங்கமைப்பில், SAGO நிறுவனத்தின் இணை அனுசரணையில் நேற்று முன்தினம், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

இந்தக் கருத்தரங்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, முந்நூறுக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin