யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இன்று(19) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 160 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin