நவராத்திரி கால ஸ்பெஷல்! செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

நவராத்திரி காலங்களில் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு சைவ உணவுகளே சமைக்கப்படும்.

இதன்படி மதிய உணவிற்கு சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கு காரசாரமான செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் எவ்வாறு தயாரிப்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் – 8
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 7
மிளகு – 1/2 டீஸ்பூன்
புளி – சிறிய துண்டு
தேங்காய் – 1/4 கப்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி, எள், வரமிளகாய், மிளகு, வேர்க்கடலை சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு பொடியாகும் வரை அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் கத்திரிக்காயை பூமொட்டு போல் 4-6 துாண்டுகளாக கீறிக் கொள்வதோடு கத்திரிக்காயின் உள்ளே அரைத்த வைத்த பொடியை தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விடவும்.

தொடர்ந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள பொடி மசாலாவைத் தூவி கிளறி விட்டால் செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் தயார்.

Recommended For You

About the Author: webeditor