மித்தேனிய தந்தை  மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் கொலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 03 பேர் கைது.

அருண விதானகமகே அல்லது மித்தேனிய கஜ்ஜாவின் கொலை தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அவர் இன்று பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

“மித்தேனிய அருண பிரியந்த கமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொலை தொடர்பாக , சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு , மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜீவன் பிரசாத் குமார, பிரபாத் துஷாரா மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் 82493 ஐ.எல். ஜனக பிரசாத் ஆகியோர் சிறிது நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

எனவே, ஏதேனும் சம்பவம் நடந்தால், அது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்பதை இந்த அவைக்கு கூற விரும்புகிறேன் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI