கனடா வாழ் இந்தியர்களுக்கான எச்சரிக்கை!

கனடா வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் வன்முறை சம்பவங்களும், இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு சுற்றறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியான சுற்றறிக்கை
இதற்கமைய,கனடா வாழ் இந்தியர்கள் எதிர்நோக்கும் குற்றச்செயல்களை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor