கனடாவில் கரடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக செர்ரிப்பழ மரங்கள் மற்றும் மற்ற பழங்கள் வளரும் செடிக்கொடி புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற பூங்கா ஊழியர்கள் வேலைசெய்துவருகின்றனர்.

இந்த கோடை நாட்கள் முடிவதற்குள் இதனை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். பார்க்ஸ் கனடா வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ஜஸ்பர் டவுன்சைட்டில் கரடிகள் தொடர்ந்து இருப்பது, பெரும்பாலும் மக்களிடமிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு முற்றங்களில், பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, “மக்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தொடர்ந்து அருகாமையில் வாழும் கரடிகள், மனித உணவு அல்லது குப்பைகளை அணுகுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளது.

இதுவரை, இப்பகுதியில் குறைந்தது 10 கரடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக சமீபத்தில், ஒரு கருப்பு கரடி மற்றும் அதன் இரண்டு குட்டிகளுடன் காணப்பட்டன.

இந்நிலையில், இதுவரை இப்பகுதியில் இருந்து குறைந்தது 20 பழ மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான Banff-ம் இதே பிரச்சனையுடன் போராடுகிறது. மனிதர்களுக்கு கரடிகளுக்கும் தொடர்புகளை குறைக்க அங்கும் பழ மரங்களை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor