பேரூந்தில் பயணித்தவர் திடீர் உயிரிழப்பு..!

காலியில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் மாபலகம நோக்கி சென்ற பேருந்திலேயே நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மாபலகமவில் இருந்து காலிக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 40 முதல் 50 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin