உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான செய்தி!

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் துணைப்பெயர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்லுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக, தேர்தலை நடத்துவதற்கு இன்று (21) முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor