மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

கம்பஹா மாவட்டம் அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 06 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தாயும் தந்தையும் வீட்டில் வேறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் சிறுவன் மயக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin