நேருக்கு நேர் மோதுண்ட இரு தனியார் பேருந்துகள்: 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று(22) பதிவாகியது.

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அலவ்வ – கிரிஉல்ல வீதியின் போயவலன நகரில் பயணிகள் பேருந்தும் வேனும் இன்று(22)நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin