நாங்கள் ஆட்சிக்கு வந்தும் வருமானம் இல்லை: கடனில்தான் நாடு பயணிக்கிறது! – அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கை கடனில் இயங்குவதாகவும் புதிய வருமானம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, உள்ளூர் மட்டத்தில் கடன் வாங்கும் வழிமுறைகள் பேணப்பட வேண்டும் என்று அவர் விளக்குகிறார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்திற்குள் நான்கு தடவைகள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணைப்பத்திரங்கள் வழங்கப்பட்டது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin