இலங்கை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல்

தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும் அம்பாறை மாவட்டங்களிற்கான வேட்பு மனுக்கள் 9 ம் தாக்கல் செய்யப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்துற்கான வேட்பு மனு திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் குகதாசனால் 10ம் திகதி
வியாழக்கிழமை காலை தாக்கல் செய்யப்பட்டது.
இதேநேரம் யாழப்பாணம் மாவட்ட வேட்புமனு சி.சிறிதரன் ஊடாகவும், வன்னி மாவட்ட வேட்பு மனு ப.சத்தியலிங்கம், மட்டக்களப்பு இ.சாணக்கியன் மற்றும் அம்பாறை கலையரசன் ஊடாகவும் தாக்கல் செய்யப்பட்டன.

Recommended For You

About the Author: admin