நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவன் அடித்துக்கொலை

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் நண்பனின் காதலியின் தந்தையின் குழுவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை உல்பத்தமடவள, நாளந்த தோட்டத்தை சேர்ந்த எம் யுகேஸ் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் சம்பந்த பட்ட நபர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாத தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin