இஸ்ரேலிய டாங்கிகள் குவிப்பு

லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தரைவழி படை நடவடிக்கை ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகும் வகையில் இஸ்ரேலியப் படை எல்லையைத் தாண்டி சிறு அளவான ஊடுருவலை ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக இரு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி.சி. நியுஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தரைவழி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இஸ்ரேல் இன்னும் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்காதபோதும் அதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்;டு வருவதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தரை நடவடிக்கை ஒன்று இடம்பெற்றாலும் அதன் அளவு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin