தங்கதுரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

தங்கதுரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்
வெலிக்கடை சிறைப் படுகொலையின் போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
நேற்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், 1983 ஜூலை படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: admin