திரையரங்குகளில் கைபேசிகளைத் தடைசெய்வதற்கு விரைவில் புதிய சட்டம் ?

இலங்கை திரையரங்குகளில் கைபேசிகளை தடைசெய்வதற்கு விரைவில் புதிய சட்டம்
திரையரங்குகளுக்குள் கைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பில் புதிய சட்டம் இயற்ற வேண்டுமென, திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

அது தொடர்பில் திரைப்படக் கூட்டுத்தாபனம் தலையிட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிக்க வேண்டுமென திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இதனூடாக சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் இடம் பெற்ற சில சம்பவங்கள் காரணமாக இத்தீர்மானத்தை மேற்கொள்வது பொருத்தமானது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin