ரணிலுடன் இணைவது பொய் என்கிறார் சம்பிக்க

பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முகநூல் மற்றும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி பொய்யானது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதியன்று முகநூல் பக்கத்தில் வெளியான “ராஜிதா – சம்பிக்க மற்றும் பொன்சேகா ஜனாதிபதியுடன் இணைகிறார்களா..? மூவருக்கும் அமைச்சர் பதவியும் தயார்..?” என்ற செய்தியும் “Another Cabinet Reshuffle” என்ற தலைப்பில் ”டெய்லி மிரர்” ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியும் பொய்யானவை என சுட்டிக்காட்டி பாட்டலி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான காரணங்கள் ஆதாரமற்றவை என்றும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐக்கிய குடியரசு முன்னணி என்ற வகையில், தனிப்பட்ட இலாபங்கள் பின்னே தொடராமல், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் தொடர்ந்து பேணுவோம்,” என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin