“ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்”

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் எனவும் அதனை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனநாயகத்தை பாதுகாத்து ஜனாதிபதி தேர்தல் குறித்த கால எல்லைக்குள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார், அதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலையோ இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான யோசனைகளை பல்வேறு தரப்பினர் சமர்ப்பிக்கலாம்.

அல்லது அது தொடர்பான எந்தவொரு கருத்தையும் சமர்ப்பிக்கலாம், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin