டெல்லி தீவிபத்து: ஏழு பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது ஏழு பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிதாகப் பிறந்த ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவைகள் (DFS) தெரிவித்துள்ளது.

அதில் ஒரு குழந்தை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று டெல்லி தீயணைப்பு சேவைகள் தலைவர் அதுல் கர்க் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin