புதிய செயற்கைகோளை ஏவிய ரஷ்யா

ஏனைய செயற்கைக்கோள்களை ஆய்வு செய்து தாக்குதல் மேற்கொள்ளும் திறனுடையது என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கருதும் செயற்கைக்கோளை ரஷ்யா ஏவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த, அமெரிக்க பாதுகாப்பு துறையின் அதிகாரியொருவர் “நாங்கள் பெயரளவிலான செயற்பாட்டைக் கவனித்துள்ளோம்,மேலும் இது பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள ஏனைய கோள்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் திறனுடையது” என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட அதே சுற்றுப்பாதையில் ரஷ்யாவின் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டதாக பென்டகன் குற்றம் சுமத்தியுள்ளது.

தகவல் தொடர்பு, புவி இருப்பிடம் மற்றும் காலநிலை மாற்றம் மீது கவனம் செலுத்துவதற்கும் முக்கியமான செயற்கைக்கோள்களுடன், இராணுவத்தினர் தங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா ஒரு வகையான அணுசக்தி செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பேரழிவு குறித்து விண்வெளிக் கொள்கைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin