தெருநாயால் கடித்து குதறப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்

இந்தியாவில் தெருநாய்க் கடியினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் பலரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகின்ற செய்திகள் அண்மைக் காலமாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

இந்நிலையில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், கோரவிகல் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா எனும் 4 வயது சிறுமி, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் வீதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அவ்வேளை தெருநாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை திடீரென துரத்தி துரத்தி கடித்துக் குதறியுள்ளது.

இதில் லாவண்யா உட்பட மொத்தம் 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயமடைந்தனர்.

லாவண்யாவுக்கு கழுத்தில் நாய் கடித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் பின்னர் அனைத்து பிள்ளைகளும் வீடு திரும்பினர்.

இந்நிலையில் சிறுமி லாவண்யா நேற்று வீட்டிலிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin