விறகு எடுக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த 39 வயதுடைய பியதிஸ்ஸ பண்டார என்பவரே யானைக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரை தேடிச் சென்ற வேலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக நேற்று (11) மாலை மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்கள் ஆன படியினால் உயிரிழந்தவரின் உடல் உறுப்புக்கள் சிதைந்து காணப்படுகின்றன சில பகுதிகள் காட்டு மிருகங்களால் வேட்டையாடப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக தம்பலகாமம் பொலிஸார் ,கந்தளாய் திடீர் மரண விசாரனை அதிகாரி உட்பட சடலம் காணப்படும் இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor